கிளப் ஹவுஸ்-ல் கெத்தாக பேசிய கிஷோர் கே சுவாமி.....!கொத்தாக தூக்கிய போலீஸ்.....!

  • IndiaGlitz, [Monday,June 14 2021]

அரசியல் தலைவர்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் அவதூறாக பேசிய கிஷோர் கே சுவாமியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வரான முக ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளங்களில் கிஷோர் கே சுவாமி மிகவும் கொச்சையாக பேசியதால், காவல் துறையினர் இவனை கைது செய்துள்ளனர். இதேபோல கடந்த பல வருடங்களுக்கு முன், பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக பேசியதால் கிஷோரை கைது செய்யவேண்டும் என பலர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து எந்த முடிவுகளும் இன்னும் எடுக்கவில்லை.

சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற்று திமுக ஆட்சியை பிடித்தது. அச்சமயத்திலிருந்து கிஷோர் கே சுவாமி திமுகவினரிடமும், தருமபுரி எம்பி டாக்டர் செந்தில் குமாரிடமும் தைரியமிருந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று சவால் விட்டிருந்தார். இந்தநிலையில் தற்போது கலைஞர்,ஸ்டாலின் குறித்ததும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்துள்ளான்.இதேபோல் கிளப் ஹவுஸ் என்ற ஆப்-பில் கிஷோர் சாமியை கைது செய்யவேண்டும் என்று தலைப்பில், இவரே விவாதத்தையும் நடத்தியுள்ளார். இதில் இவரது ஆதரவாளர்கள் இவருக்கு சாதகமாக பேச, மற்றவர்கள் எதிரே பேச, கிஷோர் முடிந்தால் என்னை கைது செய்யட்டும் என்ற அதிகார தோணியில் மிரட்டியுள்ளார். முன்னாள் தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிவிட்டு, சமூக வலைத்தளங்களில் சவால் விட்ட சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுநாள் வரை பொறுமையாக இருந்த தமிழக காவல் துறையினர், அண்மையில் கிஷோர் பேசிய பேச்சால் இன்று காலை அவரை கைது செய்துள்ளனர். இவனை ஜூன் 28-வரை செங்கல்பட்டு சிறையில் வைக்கும்படி ரிமாண்ட் செய்யப்பட்டது.
 

More News

என்னை கடித்துவிட்டது… கையில் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞரால் பரபரப்பு!

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இளைஞர் ஒருவர் கையில் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள்: திமுக பிரமுகர்கள் மீது தமிழ் நடிகை பகீர் குற்றச்சாட்டு!

ஒரு பக்கம் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து மக்களின் மத்தியில் பாராட்டுகளை குவித்து வரும் நிலையில் ஒரு சிலர் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும்

அடக்கடவுளே… நான் திமிங்கலத்தின் வாயில் இருக்கிறேன்… மரணத்தில் இருந்து தப்பிய அதிசய மனிதன்!

அமெரிக்காவில் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவரை திமிங்கலம் ஒன்று விழுங்க முயற்சித்து இருக்கிறது.

என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப் பட்டிருக்கிறார் நானும் வருந்திருக்கிறேன்: ராகவா லாரன்ஸ் டுவிட்!

என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் என்றும் நானும் வருந்தி இருக்கிறேன் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டுவிட் ஒன்றை நடிகர் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பதிவு செய்துள்ளார்.

தடுப்பூசி போடும்போதும் ஸ்டைலான போஸ் கொடுத்த யோகிபாபு: வைரல் புகைப்படம்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பதும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அனைவரும் தப்பிக்க வேண்டுமென்றால் அனைவரும் கண்டிப்பாக