கிளப் ஹவுஸ்-இல் வாய்ச்சவடால்....! செங்கல்பட்டில் கம்பி என்னும் கிஷோர் கே சுவாமி....!

  • IndiaGlitz, [Tuesday,June 15 2021]

தமிழக முன்னாள் அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய கிஷோர் கே சுவாமி, செங்கல்பட்டு சிறையில் தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறான்.

சர்ச்சை பேச்சு:

முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வரான முக ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளங்களில் கிஷோர் கே சுவாமி மிகவும் கொச்சையாக பேசியதால், காவல் துறையினர் இவனை கைது செய்துள்ளனர். இதேபோல கடந்த பல வருடங்களுக்கு முன், பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக பேசியதால் கிஷோரை கைது செய்யவேண்டும் என பலர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து எந்த முடிவுகளும் இன்னும் எடுக்கவில்லை. இதையடுத்து கிஷோர் கே சுவாமி திமுகவினரிடமும், தருமபுரி எம்பி டாக்டர் செந்தில் குமாரிடமும் தைரியமிருந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று சவால் விட்டிருந்தார். இதேபோல் கிளப் ஹவுஸ் என்ற ஆப்-பில் கிஷோர் சாமியை கைது செய்யவேண்டும் என்று தலைப்பில், இவரே விவாதத்தையும் நடத்தியுள்ளார். இதில் இவரது ஆதரவாளர்கள் இவருக்கு சாதகமாக பேச, மற்றவர்கள் எதிரே பேச, கிஷோர் முடிந்தால் என்னை கைது செய்யட்டும் என்ற அதிகார தோணியில் மிரட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து கடந்த 10-ஆம் தேதி, திமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன், கிஷோர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் கிஷோர் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் நீதிபதி அவர்கள் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் வரும் 28-ஆம் தேதி வரை செங்கல்பட்டு சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு பின் காவல் துறையினர், இவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

காட்டமாக பேசிய நீதிபதிகள் :

காவல் துறையினர் நேற்றிரவு தான் கிஷோர் கே சுவாமியை, மாதவாரத்தில் இருக்கும் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். ஏற்கனவே பெண்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பதிவிட்டது, கிஷோரின் வக்கிர புத்தியை காண்பிக்கிறது என நீதிபதி அவர்கள் அவனை சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜோகோவிச்சிடம் பரிசுப் பெற்ற சிறுவன்… உணர்ச்சிப் பொங்கும் வைரல் வீடியோ!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று முடிந்தது. நேற்று நடைபெற்ற இதன் இறுதிப் போட்டியில் செர்பியா

சிறுமிகள் முதல் அரசாங்கம் வரை அடாவடி...! ஆபாச அர்ச்சனை செய்யும் மதன் யுடியூபர் ....!

பெண்கள், குழந்தைகள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் என பப்ஜி மதனுக்கு, ரசிகர்கள் ஏராளம் உள்ளனர்.

கிஷோர் கே ஸ்வாமி கைதுக்கு கண்டனம் தெரிவித்த தமிழ் நடிகை!

பிரபல அரசியல் விமர்சகர் மற்றும் சமூக வலைதள பயனாளி கிஷோர் கே ஸ்வாமி இன்று காலை கைது செய்யப்பட்டார் என்பதும் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டதை

இளைஞருடன் டூயட் பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா: தட்டிக்கேட்டவருக்கு கொடுத்த பதிலடி!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான தாடி பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

ஐதராபாத்தை நோக்கி படையெடுக்கும் விஷால் படக்குழு: காரணம் இதுதான்!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் இதனால் தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளில் அறிவித்து கொண்டு வருகிறது