close
Choose your channels

இந்திய அணியின் அடுத்த கேப்டன் கே.எல்.ராகுல்… வெளியான பரபரப்பு தகவல்!

Tuesday, November 2, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டி20 உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி முடிந்தவுடன் அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்தியாவில் நடைபெறவுள்ள இத்தொடர் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் இருப்பார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

2021 ஐபிஎல் இரண்டாம்கட்ட போட்டிகள் கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அப்போது டி20 உலகக்கோப்பை போட்டித் தொடருக்குப்பின் டி20 வடிவிலான இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்து இருந்தார். இதையடுத்து துணை கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு கேப்டன் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது டி20 உலகக்கோப்பை போட்டித் தொடரில் இந்திய அணி வீரர்கள் படு சொதப்பலாக விளையாடி வருகின்றனர். இதற்கு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் போட்டிகள், இங்கிலாந்து தொடர் போட்டி, அடுத்து ஐபிஎல் தற்போது டி20 உலகக்கோப்பை போட்டிகள் என்று இந்திய வீரர்கள் ஓய்வின்றி விளையாடி வருவதாகவும் இதனால் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதாகவும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின்போது மூத்த வீரர்கள் சிலருக்கு ஓய்வளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இடம்பெற மாட்டார்கள் என்றும் அந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்படுவார் என்றும் கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன. கே.எல்.ராகுல் ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக பதவி வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.