close
Choose your channels

அக்கா, தங்கையை கரெக்ட் செய்ய முயன்ற வாலிபர்: திடுக்கிடும் கொலையில் திடீர் திருப்பம்

Wednesday, December 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொடைக்கானல் அருகே அக்கா, தங்கை இருவரையும் கரெக்ட் செய்ய முயன்ற ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டதும் அந்தக் கொலை தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதுமான பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை என்ற பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜான்சிராணி என்பவருக்கும் தவறான உறவு இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஜான்சி ராணியின் தங்கை சாந்திக்கும் மணிகண்டன் என்பவருக்கும் இடையே தவறான உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது

இந்தநிலையில் ஜான்சிராணி உடன் தவறான உறவு வைத்திருந்த திருப்பதி அவரது தங்கை சாந்தியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பியதாகவும் இதனால் சாந்தி மற்றும் மணிகண்டனுக்கு இது பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ஜான்சிராணி, சாந்தி மற்றும் மணிகண்டன் அவருடைய நண்பர்கள் ஆகியோர் திருப்பதியை கொலை செய்ய திட்டமிட்டனர். திருப்பதி ஒரு நாள் ஜான்சிராணி வீட்டிற்கு வந்த போது மறைந்திருந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் திருப்பதியை அடித்துக் கொலை செய்ததாகவும் இந்த கொலையில் ஜான்சி ராணி மற்றும் சாந்திக்கு தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் திருப்பதியின் பிணத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டதாகவும் அதன்பின்னர் ஒன்றுமே தெரியாதவர்கள் போல் அனைவரும் அமைதியாக வழக்கம்போல் தங்கள் வேலையை பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் ஒன்று மர்மமான முறையில் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இது குறித்து விசாரணை செய்ய வந்த போலீசார் அந்த பகுதியில் இருந்த மணிகண்டனை சந்தேகத்தின்பேரில் விசாரணை செய்ய வந்தனர். கார் கொளுத்தப்பட்டது குறித்து தன்னிடம் விசாரணை செய்யத் தான் போலீசார் வருகிறார்கள் என்பது தெரியாமல் போலீசாரிடம் திருப்பதியை கொலை செய்ததை மணிகண்டன் ஒப்புக் கொண்டுள்ளார். இது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

கார் தீ வைக்கப்பட்டது பற்றி விசாரணை செய்ய வந்த போலீசார் திருப்பதியை கொலை செய்ய கொலை செய்த கொலையாளி சிக்கியதால் பெரும் ஆச்சரியம் அடைந்தனர். தற்போது மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் ஜான்சிராணி, சாந்தி ஆகியோர்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.