கொடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் திடீர் தற்கொலை?

  • IndiaGlitz, [Tuesday,July 04 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்த தினேஷ்குமார் என்பவர் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். தினேஷ்குமார் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் இருந்ததாகவும் இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் கொடநாடு எஸ்டேட்டில் பல மர்ம சம்பவங்கள் நடந்து வருகின்றது தெரிந்ததே. அங்கு பணி புரிந்த ஓம்பகதூர் என்ற காவலாளி கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கார் டிரைவர் கனகராஜ் திடீரென சாலை விபத்தில் உயிரிழந்தார். மேலும் அவரது கூட்டாளியான சயன் என்பவரும் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதுகுறித்து காவல்துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில் கொட நாடு எஸ்டேட் கணக்குவழக்கு முழுவதையும் கம்ப்யூட்டரில் பார்த்துவந்த தினேஷ்குமாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கண்ணில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பிய தினேஷ்குமார் கடந்த சில நாட்களாக மன அழுதத்தில் இருந்ததாகவும் இந்த நிலையில் திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என்றால் அவருக்கு கொடநாடு எஸ்டேட் குறித்த முழு விபரங்களும்ம் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. முதலில் கண் பார்வை கோளாறும், பின்னர் திடீரென தற்கொலையும் நிகழ்ந்துள்ளதால் அவரது மரணத்தில் மர்மம் இருக்கின்றதா? என்பது போலீஸ் விசாரணையின் முடிவில் தான் தெரியவரும்.

More News

சபாநாயகர் தனபால் உடல்நலக்குறைவு: ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோவில் அனுமதி

தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் அவர்களுக்கு நேற்றிரவு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...

மகாபாரத 'திரெளபதி' கேர்கடரில் நயன்தாரா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களின் வெற்றியை அடுத்து 'சங்கமித்ரா' உள்பட பல சரித்திர படங்கள் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகின்றனர்...

காஜல் அகர்வாலை தேடி வரும் எம்.எல்.ஏ வாய்ப்பு

அஜித்துடன் விவேகம்' மற்றும் விஜய்யுடன் 'மெர்சல்' படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு 'எம்.எல்.ஏ' என்ற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது...

காத்ரினா கைஃப் விரும்பும் இரண்டு தென்னிந்திய ஸ்டார்கள்

பாலிவுட்டின் முன்னணி நாயகியான காத்ரினா கைஃப், தென்னிந்திய மொழிகளான தமிழ், அல்லது தெலுங்கு படத்தில் நடிக்க நேர்ந்தால் விக்ரம் மற்றும் பிரபாசுடன் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்...

பிக்பாஸ்: தலைவர் பதவியை இழந்தார் சினேகன், புதிய தலைவர் அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு இதுவரை தலைவராக இருந்த பாடலாசிரியர் சினேகன் பதவி நீக்கப்பட்டு புதிய தலைவராக காயத்ரி ரகுராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...