ஜல்லிக்கட்டு களத்தில் குதித்தார் தனுஷ்

  • IndiaGlitz, [Tuesday,January 10 2017]

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தியே தீரவேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழர்கள் தீவிரமாக போராடி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக திரையுலகினர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே கமல்ஹாசன், சூர்யா, சிம்பு, உள்பட பலர் குரல் கொடுத்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் ஒரு படி மேலே போய் ஜல்லிக்கட்டு ஆதரவு பாடலையும் இயற்றியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது இந்த ஜல்லிக்கட்டு களத்தில் தனுஷூம் குதித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில், 'ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் உணர்வுப்பூர்வமான விஷயங்களோடு கலந்த ஒன்று. இது வீரத்தமிழர்களின் அடையாளம். எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும்' என்று தனுஷ் பதிவு செய்துள்ளார்.

More News

விஜய் பிறந்த நாளை அஜித் ரசிகர்கள் கொண்டாடுவார்களா?

தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் பல்கேரிய மற்றும் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் பொங்கல் திருவிழாவிற்கு பின்னர் மீண்டும் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கங்கை அமரனுக்கு கேரள அரசின் மிகப்பெரிய விருது.

கேரள தேவசம் போர்டு மற்றும் கேரள சுற்றுலாத்துறை ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் ஹரிவராசனம் விருது இந்த ஆண்டு பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பொங்கல் விடுமுறை நீக்கம். உண்மையில் நடந்தது என்ன?

நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை விடுமுறையை இந்த ஆண்டு மத்திய அரசு கட்டாய விடுமுறையில் சேர்க்காமல் விருப்ப விடுமுறையில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

வேற லெவலில் விஜய் ஸ்டேட்டஸ். பைரவா' நடிகரிம் அனுபவம்

இளையதளபதி விஜய், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கிய 'பைரவா' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

'ஜல்லிக்கட்டு' வீரராக களமிறங்கும் விஜய்சேதுபதி

தமிழகம் முழுவதும் தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உணர்வு பூர்வமான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.