நயன்தாராவின் 'கொலையுதிர்க்காலம்' சென்சார் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,April 17 2019]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வந்த 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் நீண்ட காலதாமதத்துடன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் சமீபகாலமாக இந்த படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தீவிர முயற்சி எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் பணிகள் இன்று முடிவடைந்தன. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்த படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த 'உன்னை போல் ஒருவன்' மற்றும் அஜித் நடித்த 'பில்லா 2' படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.