close
Choose your channels

சென்னையில் பெண் மருத்துவரை அடுத்து ஆண் மருத்துவருக்கும் கொரோனா: பெரும் பரபரப்பு

Saturday, April 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 27 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சற்றுமுன் வெளியான தகவலை அடுத்து, அந்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், ஊழியர்கள் ஆகியோர்களுக்கும் கொரோனா தொற்று இருக்கின்றதா? என்பதை சோதனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பெண் மருத்துவரை அடுத்து ஆண் மருத்துவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னை கொளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் அந்த அரசு மருத்துவமனையில் இவரிடம் தொடர்பில் இருந்த மருத்துவ ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்ற நிலையில் தற்போது சென்னையில் அடுத்தடுத்து இரு மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos