close
Choose your channels

சென்னை தனியார் பள்ளி பாலியல் விவகாரம்: கொதித்தெழுந்த கோலிவுட் பிரபலங்கள்!

Monday, May 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் உள்ள பிரபலமான தனியார் பள்ளி ஒன்றில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ஒருவர் மீது புகார் எழுந்தது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் சற்றுமுன்னர் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இது இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பிக்கள் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தங்களது டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கோலிவுட் பிரபலங்கள் இந்த சம்பவத்திற்கு தங்களது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். பாடகி சின்மயி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி, ‘கர்ணன்’ படத்தில் நடித்த லட்சுமி பிரியா உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதளங்களில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவு செய்துள்ளனர்.

இந்த பள்ளியில் படித்த மாணவி ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பதிவு செய்யப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது என்பதும் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பும் இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.