close
Choose your channels

4 நண்பர்களுடன் இணையும் தோழி: 'கூட்டாளி' படத்தின் வித்தியாசமான கதை

Thursday, August 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட நான்கு நண்பர்கள், அவர்களோடு தோழியாக இணையும் ஒரு பெண், அதனால் வாழ்விலும் தொழிலிலும் ஏற்படும் பிரச்சினைகள், அதனை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் குறித்து வித்தியாசமான கதையுடன் உருவாகி வரும் திரைப்படம் 'கூட்டாளி'
அறிமுக இயக்குனர் எஸ்.கே மதி இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி, பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் என பல இடங்களில் பரபரப்பாகப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது
முற்றிலும் புது முகங்களை வைத்து உருப்பெறும், இத்திரைப்படத்தில் சதீஷ் கதாநாயகனாகவும், கிரிஷா குரூப் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் கல்யாண், அருள் தாஸ்,கௌசல்யா உதயபானு மகேஸ்வரன், போஸ்டர் நந்தகுமார், அப்புக்குட்டி, கலைஅரசன், அன்புராஜ், ஆகியோர்களும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
சுரேஷ் நடராஜன் ஒளிப்பதிவில், பிரசாந்த் தமிழ்மணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.