close
Choose your channels

உலக நாயகனை சந்தித்த ஒரு கோடி ரூபாய் வின்னர்!

Wednesday, January 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாற்றுத் திறனாளி கௌசல்யா என்பவர் சமீபத்தில் ஒரு கோடி பரிசை வென்றுள்ளார் என்ற செய்தி ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே.

இந்த போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் முதல்முறையாக இவர் தான் சரியாக 15 கேள்விகளுக்கும் பதில் சொல்லி 1 கோடி ரூபாயை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறனாளியாக இருந்தும் கேட்ட கேள்விகளுக்கு அசைவுகளின் மூலமே சரியான பதிலளித்தார் என்பதும் மதுரையை சேர்ந்த இவர் பட்டமேற்படிப்பு படித்து படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரூ.1 கோடி பரிசு வென்ற கெளசல்யா, உலக நாயகன் கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்க, அதனை இன்று நடிகை ராதிகா நிறைவேற்றியுள்ளார். இன்று கெளசல்யா தனது குடும்பத்தினர் மற்றும் ராதிகாவுடன் உலக நாயகன் கமல்ஹாசனை சந்தித்து ஆசிபெற்றார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.