close
Choose your channels

கருப்பு பெட்டி கிடைத்தது: கேரள விமான விபத்திற்கான காரணம் என்ன?

Saturday, August 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோழிக்கோட்டில் நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று ரன்வேயில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 19 பேர் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்தில் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தது என்ற தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது., விமானம் விபத்திற்குள்ளானபோது விமானத்தில் நடந்த நிகழ்வுகள்
கருப்பு பெட்டியில் பதிவாகியிருக்கும் என்பதால் இந்த விபத்திற்கான உண்மையான காரணம் விரைவில் இந்த கருப்புப்பெட்டியின் மூலம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மோசமான வானிலை மற்றும் ரன்வேயில் இருந்து தண்ணீர் தான் விபத்துக்கு காரணமா? அல்லது விமானத்தின் சக்கரங்கள் சுழலாதது தான் விபத்தை ஏற்படுத்தியதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் கருப்பு பெட்டி அனைத்திற்கும் விடை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.