கவுதம்மேனனின் அடுத்த படத்தில் வில்லனாகும் தமிழ் ஹீரோ!

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இந்த கொரோனா விடுமுறையிலும் பிசியாக உள்ளார் என்பதும் அவரது ’கார்த்திக் டயல் செய்த எண்’ மற்றும் ’ஒரு சான்ஸ் கொடு’ ஆகிய குறும்படங்கள் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது தனது அடுத்த படத்துக்கான பணிகளில் தீவிரமாக கௌதம் மேனன் உள்ளார். அவர் தற்போது ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற திரைப்படத்தையும் ’துருவ நட்சத்திரம்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் அது போக வெப்தொடர்களையும் இயக்க திட்டமிட்டு வருகிறார் என்பதும், ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் 2 ஆம் பாகத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற திரைப்படத்தில் வருண் மற்றும் ராஹே ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக பிரபல தமிழ் பட ஹீரோ கிருஷ்ணா நடிக்க உள்ளதாக கவுதம் மேனன் அறிவித்துள்ளார்.

’கழுகு’, ‘யாமிருக்க பயமே’ உள்பட பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் ’மாரி 2’ உள்ளிட்ட படங்களிலும் நடித்த கிருஷ்ணா தற்போது முழுநேர வில்லனாக ’ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் இசையமைக்க உள்ளார். எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மாறி மாறி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் வனிதா-சூர்யாதேவி

வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் திருமணம் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திரையுலகினர் ஒருசிலரும், சூர்யா தேவி என்ற பெண்ணும்

திறமைகளை தேர்வுகள் மட்டும் அளவிடுவதில்லை: பிளஸ் 2 ரிசல்ட் குறித்து கமல்ஹாசன்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளிவந்தது என்பதும், மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் இணையதளங்களில் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை பார்த்து தெரிந்து கொண்டனர்

ஷாலினி அஜீத் முன்னணியில் கௌரவிக்கப்பட்ட விஜய்-சங்கீதா: வைரலாகும் புகைப்படங்கள்

தளபதி விஜய் மற்றும் சங்கீதா திருமணம் கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்டு 25ஆம் தேதி நடைபெற்றது என்பது தெரிந்ததே. இன்னும் ஒருசில நாட்களில் விஜய்-சங்கீதாவின் திருமண நாள் வரவுள்ளது.

ஜோலி முடிஞ்சது… 25 ஆயிரம் பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பும் பிரபல ஏர்லைன்ஸ் நிறுவனம்!!!

கொரோனா ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடியால் உலகின் பெரும்பலான ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன.

புபோனிக் பிளேக் நோய்த்தொற்றால் 15 வயது சிறுவன் உயிரிழப்பு!!! பரபரப்பு சம்பவங்கள்!!!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீனாவின் மங்கோலியா மாகாணப் பகுதியில் ஒரு புதிய நோய்த்தொற்று பரவுவதாகச் செய்திகள் வெளியாகியது.