சிம்பு-கவுதம் மேனன் படத்தின் நாயகி பாலிவுட் பிரபல நடிகையா?

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் தயாராக இருக்கும் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிக்க கூடிய நடிகை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓட்டியில் வெளியான ’மிமி’ என்ற திரைப்படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகையான க்ரித்தி சனோன் தான் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் நாயகி என்றும் கூறப்படுகிறது. க்ரித்தி சனோன் நடித்த ’மிமி’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளது என்பதும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் கதையை கேட்ட க்ரித்தி சனோன் இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்புக் கொண்டார் என்றும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

நடிகை க்ரித்தி சனோன் தற்போது பிரபாஸ் நடிப்பில் ராமயண கதையை மையமாக வைத்து 300 கோடி பட்ஜெட் படமான ஆதிபுருஷ் என்ற படத்தில் சீதையாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு, க்ரித்தி சனோன் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரிலீசுக்கு தயாராகும் கவுதம் கார்த்தியின் பழைய திரைப்படம்....!

8 வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட நடிகர் கவுதம் கார்த்தியின் "சிப்பாய்" திரைப்படத்தின், படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது.

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் விஜய், சிம்பு பட நடிகை!

விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் மற்றும் சிம்பு உள்பட பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

விஜய்யின் அடுத்த பட இயக்குனரை உறுதி செய்த பிரபல பாடகர்!

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி

ராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் இந்த தமிழ் நடிகைக்கும் தொடர்பா? சம்மன் அனுப்பிய போலீஸ்!

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சமீபத்தில் ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரை இன்று மேலும் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி

இது வெறும் பேப்பர்தான்: கத்தை கத்தையாய் கையில் வைத்திருந்த பணம் குறித்து ஓவியா!

கத்தை கத்தையாக கையில் 500 ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு 'இது வெறும் பேப்பர்தான் இதை உங்கள் தேவைக்காக கொடுக்கிறீர்கள்' என்று நடிகை ஓவியா பதிவு செய்திருக்கும் புகைப்படத்தால்