close
Choose your channels

ரஜினி நல்லவர், வாய் தவறி கூறியிருப்பார்: பிரபல அரசியல்வாதி விமர்சனம்

Saturday, January 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடைபெற்றது துக்ளக் ஐம்பதாவது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய ஒரு சில கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக முரசொலி வைத்திருந்தால் திமுககாரன் என்றும் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்றும் அவர் கூறியதை இன்னும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக திமுகவினர் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பதும் இது குறித்து இன்றைய முரசொலியில் ஒரு நீண்ட கட்டுரை வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்துப் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முரசொலி குறித்து ரஜினிகாந்த் பேச்சை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியபோது ’ரஜினி நல்லவர், அவர் முரசொலியையும் துக்ளக்கையும் தொடர்புபடுத்தி பேசியது தவறுதான். இருப்பினும் அதனை அவர் வாய் தவறி கூறியிருப்பார் என்றே நினைக்கிறேன்’ என்று கூறினார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.