ரஜினி நல்லவர், வாய் தவறி கூறியிருப்பார்: பிரபல அரசியல்வாதி விமர்சனம்

  • IndiaGlitz, [Saturday,January 18 2020]

சமீபத்தில் நடைபெற்றது துக்ளக் ஐம்பதாவது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய ஒரு சில கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக முரசொலி வைத்திருந்தால் திமுககாரன் என்றும் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்றும் அவர் கூறியதை இன்னும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக திமுகவினர் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பதும் இது குறித்து இன்றைய முரசொலியில் ஒரு நீண்ட கட்டுரை வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்துப் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முரசொலி குறித்து ரஜினிகாந்த் பேச்சை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியபோது ’ரஜினி நல்லவர், அவர் முரசொலியையும் துக்ளக்கையும் தொடர்புபடுத்தி பேசியது தவறுதான். இருப்பினும் அதனை அவர் வாய் தவறி கூறியிருப்பார் என்றே நினைக்கிறேன்’ என்று கூறினார்

More News

சொந்த ஊரில் மனைவி மகனுடன் பொங்கல் கொண்டாடிய ரஜினியின் புது மருமகன்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய மருமகனான விசாகன் மனைவி மற்றும் மகனுடன் தனது சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன 

வரலட்சுமியின் 3வது படம் குறித்த அறிவிப்பு!

விக்னேஷ் சிவன் இயக்கிய 'போடா போடி' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை வரலட்சுமி சரத்குமார் அதன்பின்னர் பல தமிழ் மற்றும் பிற மொழி திரைப்படங்களில் நடித்தார்

இலங்கைக்கு ரஜினி வரலாமா? பிரதமரின் மகன் பதில்!

இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் சமீபத்தில் சென்னை வந்திருந்த போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார் 

'மாஸ்டர்' படத்திற்காக மாளவிகா எடுத்த பயிற்சி!

பொதுவாக மாஸ் நடிகர்களின் படங்களில் நாயகிக்கு அதிக வேலை இருக்காது என்றும் பாடல்கள் மட்டும் கிளாமருக்காகவே அவர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது 

நேற்று திருமணம், இன்று மருத்துவமனையில்: 75 வயது நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்!

75 வயது நடிகர் ஒருவர், சக நடிகையை நேற்று திருமணம் செய்துகொண்ட நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது