close
Choose your channels

பிரச்சனை ரொம்ப பெரிசா ஆயிடுச்சு, என்ன பண்றதுன்னே புரியலை: கே.எஸ்.ரவிகுமார் வெளியிட்ட வீடியோ!

Thursday, March 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கேஎஸ் ரவிக்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தல அஜித், தளபதி விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ’கூகுள் குட்டப்பன்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன், லாஸ்லியா உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேஎஸ் ரவிக்குமார் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ’பிரச்சனை பெரிதாகி விட்டது என்றும், என்ன செய்வது என்றே புரிய வில்லை என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

நான் ஒரு சாதாரண இந்திய குடிமகன். ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அது மாதிரி எனக்கும் ஒரு கனவு இருந்தது. சொந்தத்தில் ஒரு வீடு கட்டவேண்டும் என்பதுதான் அந்த கனவு. பல வருடங்கள் கஷ்டப்பட்டு ஓய்வு பெறும் வயதில் ஒரு அழகான வீடு கட்டினேன். அதில் சந்தோசமாக இருக்கலாம் என்று நினைக்கும்போது ஒரு பிரச்சனை வந்தது. நான் என்ன கோழையா? எதிர்த்து கேட்டேன், பிரச்சனை ரொம்ப பெரிதாகி விட்டது. என்ன பண்ணுவது என்றே புரியவில்லை. அதனால் தான் உங்களிடம் பேசுகிறேன். மறுபடியும் நாம் பேசுவோம். அப்பொழுது உங்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரியும், அடுத்த வீடியோவில் பேசுவோம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.