close
Choose your channels

நேதாஜி வாழ்க்கையை ஜனரஞ்சமாக படமாக்க விரும்பும் பிரபல இயக்குனர்

Tuesday, August 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், கமல், ரஜினி படங்கள் உள்பட பல கமர்ஷியல் படங்களை எடுத்துள்ள நிலையில் இந்திய விடுதலைக்கு வித்திட்ட சுதந்திர போராட்டி வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கதையை படமாக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
தினசரி நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "சுதந்திர தியாகிகள் பலரது வாழ்க்கை படமாக்கப்பட்டுவிட்டது. எனக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்கையை ஜனரஞ்சகமாக படமாக்க ஆர்வம் உள்ளது. அவரைப்பற்றிய நிறைய உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன. அவற்றை வர்த்தக ரீதியாக சொன்னால் விறுவிறுப்பாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.
மேலும் 70வது சுதந்திரதினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சுதந்திர இந்தியா குறித்து கே.எஸ்.ரவிகுமார் கூறியபோது, 'சுதந்திரத்துக்கு முன்பு அந்நியர்களின் அதிகாரத்தில் அடிமைகளாக இருந்தோம். இப்போது நம்மால் தேர்வு செய்யப்படவர்களின் ஆட்சி அதிகாரத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். சுதந்திரத்துக்கு முன்பு நம்மவர்களில் சில எட்டப்பர்கள் இருந்ததுபோல் இப்போதும் சில எட்டப்பர்களும், கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்' என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.