close
Choose your channels

குரங்கணி தீவிபத்து: இன்று ஒரே நாளில் இருவர் பலி

Friday, March 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் டிரெக்கிங் மற்றும் சுற்றுலா சென்ற 36 பே சிக்கி கொண்டதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உடல்கருகி பரிதாபமாக பலியாகினர். இந்த நிலையில் இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்து மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த சிலர் ஒவ்வொருவராக கடந்த சில நாட்களாக பலியாகி வந்ததால் பலி எண்ணிக்கை நேற்று வரை 18ஆக இருந்தது

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் சிகிச்சை பெற்று வந்த இருவர் பலியாகியுள்ளதால் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. இன்று மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சையை சேர்ந்த சாய்வசுமதி என்பவரும் சென்னையை சேர்ந்த நிவ்யா பிரக்ருதி  என்பவரும் பலியாகினர். இன்று ஒரே நாளில் இரண்டு பேர் பலியாகியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில் மேலும் சிகிச்சை பெற்று வரும் ஒருசிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த தீ விபத்து குறித்து விசாரணை செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆணையம் இன்று முதல் விசாரணையை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.