close
Choose your channels

கஸ்தூரியின் டுவிட்டை திருத்திய குஷ்பு!

Thursday, September 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மும்பையில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து, தமிழகத்தில் இந்து குடும்பத்திற்கு மருமகளாகி இரண்டு மதங்களின் நம்பிக்கைக்கும் உண்மையாக இருப்பதாக நடிகை குஷ்பு குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்தார்.

கஸ்தூரியின் இந்த டுவீட்டுக்கு நன்றி தெரிவித்த குஷ்பு, கஸ்தூரியின் டுவீட்டில் ஒரு சிறு திருத்தம் செய்தார். மும்பையில் பிறந்த ஒரு இந்திய பெண் தமிழகத்தின் அடையாளம் ஆகி இருக்கிறார். இங்கு ஒரு சக இந்தியரை மணந்து மதசார்பின்மையையும் மனித நேயத்தையும் நிலை நாட்டி இருக்கிறார். என்னுடையை இந்திய தேசம் இது. சாதியும் மதமும் உண்மையான அன்புக்கு இடையில் வர முடியாது. உண்மையான கடவுள் அன்புதான் என்று குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.

கஸ்தூரி, குஷ்பு ஆகிய இருவரது டுவீட்டுக்களுக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. குறிப்பாக குஷ்பு மத அடையாளம் இன்றி அரசியல் செய்வதாகவும், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி விட்டு அது சம்பந்தமான புகைப்படங்களை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இரு மதங்களையும் ஏற்றுக்கொண்டவராக இருப்பதாகவும் பல நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.