close
Choose your channels

குஷ்பு வீட்டிற்குள்ளும் புகுந்த கொரோனா பாதிப்பு: பிரார்த்தனை செய்ய குஷ்பு வேண்டுகோள்

Sunday, April 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை குஷ்புவின் கணவரும் பிரபல இயக்குனருமான சுந்தர் சி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து குஷ்பு தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எனது கணவர் சுந்தர் சி அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை நலமாக இருந்தாலும் மருத்துவரின் அறிவுரைப்படியும் பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்யும்படியும் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து சுந்தர் சி விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சுந்தர் சி தற்போது ’அரண்மனை 3’ என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளை விறுவிறுப்பாக கவனித்துக் கொண்டிருந்தார் என்பதும் கடந்த சில நாட்களாக குஷ்பு போட்டியிடும் தொகுதி ஆயிரம்விளக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்துவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.