close
Choose your channels

ஜெயலலிதாவை விட தினகரன் சிறந்த அரசியல்வாதியா? குஷ்பு

Tuesday, December 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெற்றுள்ளது பல அரசியல் கட்சிகளையும், அரசியல் தலைவர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு பணம் ஒரு பிரதான காரணமாக கூறப்பட்டாலும், ஜெயலலிதாவை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் பெற்றுள்ள வெற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறுகையில், ஜெயலலிதாவை விட டிடிவி தினகரன் சிறந்த அரசியல்வாதி கிடையாது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுக்கு, ஆட்சியின் மீதான அதிருப்தியே காரணம். ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஜெயலலிதாவிற்கு செய்த துரோகத்தால் தான், தினகரன் வெற்றி பெற்றுள்ளார்

மேலும் ஆர்.கே.நகரில் தினகரனுக்கு இவ்வளவு வாக்குகள் கிடைத்தது எப்படி? பணம் கொடுத்துதான் தினகரன் வெற்றி பெற்றுள்ளார். பணம் எந்தளவிற்கு பாயும் என்பதையே ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் காட்டியுள்ளது. பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் ஆர்.கே.நகர் தொகுதியை தவிர வேறு எந்த தொகுதியிலும் தினகரன் வெல்வாரா என்பது சந்தேகமே?

அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதே தினகரனின் குறிக்கோள். அது நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.