close
Choose your channels

'அரண்மனை 3' ரிலீஸ் குறித்து குஷ்பு டுவிட்!

Tuesday, September 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர்சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘அரண்மனை 3’படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவுற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவலை தயாரிப்பாளர் குஷ்பு வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யூஏ சான்றிதழ் அளித்துள்ளதாகவும் இதனை அடுத்து இந்த படம் அடுத்த மாதம் திருவிழா நேரத்தில் வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படம் அக்டோபர் 13ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறை நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரண்மனை, அரண்மனை 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்திற்கு ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தர்சி,ஆர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகிய மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். மேலும் விவேக், யோகிபாபு, குஷ்பூ, கோவை சரளா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார் என்பதும், செந்தில்குமார் ஒளிப்பதிவில் ஃபென்னி ஒலிவர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை குஷ்பு மற்றும் சுந்தர் சி தயாரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.