ஒரு பெண் எப்படி வாழ்கிறாள் என்று யாரும் பேசக்கூடாது: நயன்தாரா விவகாரம் குறித்து குஷ்பு

  • IndiaGlitz, [Monday,March 25 2019]

'கொலையுதிர்க்காலம்' சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டிக்காத திரையுலகினர்களே இல்லை எனலாம். இதுகுறித்து ராதாரவி வருத்தம் தெரிவித்தும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி வருகிறது

இந்த நிலையில் நயன்தாரா விவகாரம் குறித்து நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறியபோது, 'தங்கள் அகம்பாவத்தை ஊக்கப்படுத்திக்கொள்ள ஆண்கள் எளிதில் கையாளும் வழி, ஒரு பெண்ணை இழிவுபடுத்துவது அல்லது அவளது குணத்தைக் கொச்சைப்படுத்துவது. ஒரு பெண் எப்படி வாழ்கிறாள், என்ன செய்கிறாள் என்பதைப் பற்றியெல்லாம் யாரும் பேசக்கூடாது. நயன் அகத்திலும் புறத்திலும் அழகானவர். அவரை அவமானப்படுத்துபவரும், அதைக் கைதட்டி ரசித்தவர்களும் திரைத்துறைக்கே அவமானச் சின்னங்கள்' என்று தனது சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குஷ்புவின் இந்த கருத்தை பெரும்பாலான நெட்டிசன்கள் வரவேற்றுள்ள்னார்.

More News

ராதாரவி விவகாரம் குறித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை

நடிகர் ராதாரவி சமீபத்தில் நயன்தாரா  நடித்த 'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

ஸ்டாலின், கனிமொழிக்கு நன்றி கூறிய விக்னேஷ் சிவன்

நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய பேச்சை முதலில் திரையுலகினர் உள்பட யாரும் கண்டுகொள்ளாத நிலையில் இதுகுறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இதுகுறித்து பதிவு செய்த டுவிட்டுக்களால்தான்

சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் கொடுத்த அதிர்ச்சி!

விஜய்சேதுபதி, சமந்தா நடிப்பில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது.

திமுகவிற்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன்!

வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, திமுக, அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளையும் மாறி மாறி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்

ராதாரவிக்கு நாசர் எழுதிய காட்டமான கடிதம்!

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவிக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் காட்டமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: