ஜெயம் ரவி முன்னாள் மனைவி ஆர்த்தி வீட்டுக்கு திடீரென சென்ற குஷ்பு.. எல்லாம் நல்ல காரியம் தான்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஜெயம் ரவியின் முன்னாள் மனைவி ஆர்த்தி வீட்டிற்கு குஷ்பு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், அவரது விசிட் நல்ல விஷயத்துக்காக தான் என்பது தெரியவந்துள்ளது.
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதிகள் சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர் என்பதும், இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் விசாரணைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் ஆர்த்தி தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக குஷ்பு அவருடைய வீட்டிற்கு சென்றார். அவருடன் நடன இயக்குனர் பிருந்தா மற்றும் சிலர் சென்றிருந்தனர். ஆர்த்திக்கு குஷ்பு பிறந்தநாள் வாழ்த்து கூறிய புகைப்படங்கள், அவரது குடும்பத்தினர்களுடன் மகிழ்ச்சியுடன் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை குஷ்பு தனது சமூக பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"என்னுடைய ஸ்வீட் பெண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த உலகில் மிகவும் மகிழ்ச்சியான ஒரு பெண்ணாக நீ வாழ வாழ்த்துக்கள். லவ் யூ ஆர்த்தி" என்று குஷ்பு பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான லைக்குகள் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவியை திருமணம் செய்வதற்கு முன்பே ஆர்த்தி குடும்பத்துடன் குஷ்புவுக்கு நல்ல பழக்கம் இருந்தது என்றும், ஜெயம் ரவி–ஆர்த்தி திருமணத்திற்கு கூட குஷ்பு தான் உதவி செய்தார் என்றும் கூறப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com