விபத்தில் சிக்கிய குஷ்பு ! 

  • IndiaGlitz, [Wednesday,November 18 2020]

சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகை குஷ்பூ அக்கட்சியில் சுறுசுறுப்பாக பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர் என்பதும் இந்த யாத்திரையால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்க நடிகை குஷ்பு தனது காரில் சென்னையில் இருந்து சென்றார். அப்போது அவருடைய கார் செங்கல்பட்டு அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென கண்டெய்னர் லாரி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது

இந்த விபத்தில் குஷ்புவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விபத்து குறித்து பேட்டி கொடுத்த நடிகை குஷ்பு ’நான் நலமாக இருக்கிறேன் என்றும் இந்த விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் முருகன் தான் என்னை காப்பாற்றி விட்டார்’ என்றும் தெரிவித்துள்ளார். பாஜக பிரமுகர் குஷ்பு சென்ற கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

நடிகர் தவசிக்கு சிம்பு அளித்த மிகப்பெரிய தொகை!

'கருப்பன் குசும்புக்காரன்' என்ற டயலாக் மூலம் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் தவசி 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற திரைப்படத்தில் பஞ்சாயத்து காட்சியில் நடிப்பில் தூள் கிளப்பியிருப்பார்.

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் அளித்த பரிசு என்ன தெரியுமா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு அதிகாலை 12 மணியிலிருந்து ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள்

இதுதான் லவ்லி ப்ரிவெட்டிங் போட்டோஷூட்: ஆபாச தம்பதிகளுக்கு சாட்டையடி!

கடந்த சில ஆண்டுகளாக திருமணத்திற்கு முந்தைய ப்ரிவெட்டிங் போட்டோஷூட் கலாச்சாரம் பெருகி வருகிறது. அதிலும் ஒரு சிலரின் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்

குழந்தை வரத்துக்காக மனித நுரையீரலை வைத்து சடங்கு… மூடநம்பிக்கையின் உச்சக்கட்டம்!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் குழந்தை வரம் வேண்டும் என்பதற்காக ஒரு தம்பதி சிறுமி ஒருவரை கடத்தி கொலை செய்து அவரின் நுரையீரலை அகற்றிய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தளபதி விஜய்யை சந்தித்த ஐபிஎல் ஹீரோ: வைரலாகும் புகைப்படம்!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இந்திய இளம் வீரர்கள் பலர் அடையாளம் காணப்பட்டனர் என்பது தெரிந்ததே.