close
Choose your channels

சென்னையில் பெண் மருத்துவருக்கு கொரோனா; மருத்துவமனையை சீல் வைக்க முடிவா?

Saturday, April 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வரும் நிலையில் நேற்று மட்டும் தமிழகத்தில் 77 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் சென்னையில் மட்டும் 9 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையில் மட்டும் கொரோனாவால் 172 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையில் பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அந்த மருத்துவர் பணியாற்றிய மருத்துவமனைக்கு சீல் வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மும்பையில் 3 டாக்டர்கள் மற்றும் 26 நர்ஸ்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் அவர்கள் பணிபுரிந்த மருத்துவமனை சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் பணிபுரிந்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா தோற்று பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.