விக்னேஷ் சிவனை திருமணம் செய்வதற்கு முன் நயன்தாராவுக்கு முதல் திருமணமா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, விக்னேஷ் சிவனை திருமணம் செய்வதற்கு முன்னர் மரத்தை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரபல நடிகை நயன்தாராவுக்கும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பதும் இதனை அடுத்து விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் நயன்தாராவுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் ஜோதிட மரபின்படி அவர் நேரடியாக விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்றும் அதற்கு முன்பு ஒரு மரத்தை திருமணம் செய்துவிட்டு அதன் பின்னர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இதுகுறித்து மதப் பெரியவர்கள் மற்றும் ஜோதிட நிபுணர்கள் சடங்கு சம்பிரதாயங்களை செய்ய அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இதேபோல் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை திருமணம் செய்வதற்கு முன்னர் மரத்தை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. அதேபோல் நயன்தாராவும் முதலில் மரத்தை திருமணம் செய்து விட்டு அதன் பிறகு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

மேலும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் திருப்பதி திருமலையில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.