close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மறுப்பு தெரிவித்தது ஏன்? பெண் இயக்குனர் பதில்

Tuesday, July 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி தினமும் ஒரு மணி நேரம் பெரும்பாலான பார்வையாளர்களை கட்டிப்போட்டி வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஒரே குறையாக பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுவது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்கள் இன்னும் கொஞ்சம் பிரபலமானவர்களாக இருந்திருக்கலாம் என்பதுதான்.

இந்த நிலையில் இயக்குனரும் குணசித்திர நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் தன்னால் குடும்பத்தினர்களை பிரிந்து 100 நாட்கள் இருக்க முடியாது என்றும் பத்து கோடி ரூபாய் கொடுத்தாலும் தன்னால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டதாகவும் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் தற்போது 'ஹவுஸ் ஓனர்' என்ற படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதி வருவதாகவும் இந்த படத்தில் அசோக்செல்வன் நாயகனாவும், மஞ்சிமா மோகன், நந்திதா ஸ்வேதா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இவர்களில் ஒருவர் நாயகியாகவும் நடிக்கவுள்ளதாகவும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.