லட்சுமி மேனனின் பேய் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்

  • IndiaGlitz, [Sunday,July 26 2015]

சிபிராஜ் நடித்த 'நாய்கள் ஜாக்கிரதை' படத்டை இயக்கிய சக்தி செளந்திரராஜன் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கி வருவது குறித்து ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்து வரும் லட்சுமி மேனக்கு பேய் வேடம் என்று பல ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இயக்குனர் சக்தி இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

இந்த படத்தில் லட்சுமி மேனன் நடித்து வருவது உண்மைதான். ஆனால் செய்திகள் வெளிவந்த மாதிரி அவர் பேய் கேரக்டரில் நடிக்கவில்லை. அவர் பேயாக நடித்து வருகிறார் என்பது ஒரு வதந்தியே. மேலும் இந்த படமே பேய் சம்பந்தப்பட்ட கதை இல்லை. இது ஒரு வித்தியாசமான வேறு ஒரு களம்' என்று கூறிய சக்தி செளந்திரராஜன், இந்த படத்திலும் லட்சுமி மேனன் மீண்டும் கிராமத்து பெண்ணாக நடிக்கின்றார். ஆனால் இதுவரை தமிழ் சினிமா பார்க்காத வித்தியாசமான கிராமத்து பெண் வேடம் லட்சுமி மேனனுக்கு கிடைத்துள்ளது' என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து முடிந்துள்ள நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத் நகரில் நடைபெறவுள்ளதாகவும், 'என்னை அறிந்தால்' படத்தில் அஜீத் மகளாக நடித்த அங்கிதாவுக்கு இந்த படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டர் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைக்க டி.இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனி ஒருவனில் நயன்தாராவின் தைரியம்+ரொமான்ஸ். எம்.ராஜா

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'தனி ஒருவன்' படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையதள ரசிகர்களின் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் இயக்குனர் எம்.ராஜா, இந்த படம் குறித்தும், படத்தில் நடித்த நட்சத்திரங்கள் குறித்தும் ஒருசில கருத்துக்களை தெரிவித்துள்ளார்......

மகேஷ்பாபுவின் ஸ்ரீமந்துடு படத்தின் தமிழ் டைட்டில்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடித்த ஸ்ரீமந்துடு திரைப்படம் முதன்முதலாக ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவரவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்....

போலீஸில் புகார் அளித்த போலீஸ் நடிகை

சமீபத்தில் ரிலீஸான 'பாபநாசம்' திரைப்படம் 'பாகுபலி'யின் அபார வசூலுக்கு இடையே தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...

ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்த 6 படங்களில் பணியாற்றிய ஒரே நபர்

கோலிவுட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை அள்ளி தந்த படங்கள் என்று பார்த்தால் அவை எந்திரன், துப்பாக்கி....

விஜய்-சமந்தா முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு ஈசிஆர் சாலையில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...