டெல்லி அணியில் இடம்பிடித்த இளம் சிங்கம்… யார் இந்த லலித் யாதவ்?

டெல்லி கேபிடள்ஸ் அணியில் அமித் மிஸ்ரா போன்ற மூத்த வீரர்கள் இருக்கும்போது அறிமுகப் போட்டியிலேயே இளம் வீரரான லலித் யாதவ் களம் இறங்கப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் யார் இந்த லலித் மிஸ்ரா என்ற சந்தேகத்தையும் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு டெல்லி கேபிடள்ஸ் அணியால் ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டவர்தான் இந்த லலித் யாதவ். ஆனால் கடந்த ஆண்டு அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இவருக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் முதல் போட்டியிலேயே 24 வயதான லலித் யாதவ் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்.

அதோடு இவர் சையத் முஷ்டாக் கோப்பை போட்டியிலும் விஜய் ஹசாரே போட்டியிலும் திறமையாக ஆடி ரசிகர்களிடையே தனிக்கவனம் பெற்று இருக்கிறார். மேலும் இந்தப் போட்டி நடைபெறும் மும்பை பிட்ச் பேட்டிங்கிற்கு ஏற்றது என்பதால் ஆல்ரவுண்டர் என்ற வகையில் லலித் யாதவ் நம்ப்படும் ஒரு வீரராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டுடன் இவர் கூட்டணி வைத்து முதல் போட்டியில் ஆடிய ஆட்டமும் ரசிகர்களிடையே தனிக் கவனத்தைப் பெற்று இருக்கிறது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ஃபீல்டிங்கையே தேர்வு செய்தது. இதனால் டெல்லி அணி முதலில் பேட்டிங்கில் இறங்கியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் மூத்த வீரர்கள் கலந்து கட்டி விளையாடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியின் மூத்த வீரர்கள் அனைவரும் மரண அடி வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டெல்லி அணியின் பெருத்த நம்பிக்கையாக இருந்து அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அரை சதம் விளாசி 8 விக்கெட் இழப்பிற்கு 147 என்ற நிலைக்குக் கொண்டு சென்றார். இதனால் மூத்த வீரர்கள் பலரும் கைவிட்ட நிலையில் தனி ஆளாக நின்று டெல்லி அணியை வலிமைப்படுத்தினார் என்பது போல ரிஷப் பண்ட் பாராட்டப்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஷங்கர்-ஆஸ்கார் ரவிச்சந்திரன் பிரச்சனை: 'அந்நியன்' படத்தின் உதவி இயக்குனரின் டுவீட்!

ஷங்கர் இயக்கிய 'அந்நியன்' திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த பிரச்சனை நேற்று முதல் நடந்து வருகிறது என்பதை பார்த்தோம். இந்த படத்தின் ரீமேக்கை தன்னுடைய அனுமதி இல்லாமல் எடுக்கக் கூடாது

என்னுடைய இதயத்தை வென்றவர்கள்: கீர்த்திசுரேஷின் வீடியோ வைரல்!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம் தேதி உலக கலை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் இந்த தினத்தில் உலகிலுள்ள ஓவிய கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருந்து வருகிறது என்பதும் தெரிந்ததே

ஒரே படுக்கையில் இரண்டு கொரோனா நோயாளிகள்: டெல்லி மருத்துவமனையின் அவலம்!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தினமும் ஆயிரக்கணக்கானோர்

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நடிகரின் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரின் திரைப்படம் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பி முத்துராமன் உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை!

ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குநர் எஸ்பி முத்துராமன் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக