close
Choose your channels

லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகன் திடீர் உயிரிழப்பு

Tuesday, October 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருச்சி லலிதா ஜுவல்லரி உள்ளிட்ட நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் திடீரென உயிரிழந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.  இந்த வழக்கில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்து முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

லலிதா ஜூவல்லர்ஸ் நகைக்கடை கொள்ளை மட்டுமின்றி சமயபுரம் டோல்கேட் பஞ்சாப் நேஷ்னல் வங்கி கொள்ளை, பாலக்கரை திருட்டு வழக்குகளும் முருகன் மீது இருந்தது. அதுமட்டுமின்றி முருகன் மீது சென்னையில் 12, கர்நாடகத்தில் 46 வழக்குகள் இருந்தன.

இந்த நிலையில் சிறையில் இருந்த முருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் சற்றுமுன் வெளீயான தகவலின்படி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொள்ளையன் முருகன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.