கேரளா-இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவு!!! இதுவரை 55 தமிழர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்!!!

  • IndiaGlitz, [Saturday,August 08 2020]

 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியிலுள்ள ராஜமாலா நேமக்கடவூர் அடுத்த பெட்டிமாடா பகுதியில் கடந்த 2 தினங்களாகப் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 55 தமிழகர்கள் உயிரிழந்து இருப்பதாக தமிழகத்தின் கோவில்பட்டி மாவட்டம் கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன் தகவல் தெரிவித்து உள்ளார். கோவில்பட்டி மாவட்டம் கயத்தாறு வட்டத்திலுள்ள பாரதிநகர் பகுதியில் இருந்து 80 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கேரள மாநிலத்தின் பெட்டிமாடாவில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் தேயிலை பறிப்பதற்காக அங்கேயே தங்கி வேலைப் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக கேரளாவின் இடுக்கி, பத்தனம் திட்டா, வயநாடு போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் பெட்டிமாடா பகுதியிலுள்ள எஸ்டேட்டில் தற்காலிகக் குடியிருப்பு அமைத்து தங்கியிருந்த 80 தமிழர்கள் நிலச்சரிவில் சிக்கியதாக நேற்று முதல் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நேற்றுகாலை முதலே அப்பகுதியில் பேரிடர் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கனமழை காரணமாகவும் கடுமையான நிலச்சரிவின் காரணமாகவும் தேடுதல் பணி தொய்வு அடைந்திருப்பதாகக் கூறப்பட்டது.

நேற்று மாலை வரை 7 உடல்கள் மீட்கப் பட்டதாகக் செய்திகள் வெளியான நிலையில் தற்போது 55 தமிழர்கள் இதுவரை உயிரிழந்து இருப்பதாக கயத்தாறு வட்டாட்சியர் அதிகாரப் பூர்வமாக தகவல் அளித்து இருக்கிறார். நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கயத்தாறு வட்டாட்சியரை அணுகி கேட்டபோது இத்தகவலை அவர் வெளியிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

More News

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானியின் ஆச்சரியத்தக்க முன்னேற்றம்!

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் கடந்த சில வாரங்களுக்கு 10வது இடத்திற்கு இருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி ஒருசில நாட்களில் பங்குச்சந்தை மேதை வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளி

பிறக்கப்போகும் குழந்தையை பார்க்காமல் உயிரிழந்த விமானி: கேரள விமான விபத்தின் சோகக்கதை

கேரள மாநில விமான விபத்தில் உயிரிழந்த இணைவிமானி அகிலேஷ்குமார் என்பவரின் மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும்

கொரோனா பாதிப்படைந்த அபிஷேக்கின் நிலை என்ன? அமிதாப் பரபரப்பு டுவீட்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய் மற்றும் பேத்தி ஆராத்யா ஆகிய நால்வரும் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்

தஞ்சை மருத்துவமனை விவகாரம்: ஜோதிகாவின் பாராட்டுக்குரிய செயல்!

நடிகை ஜோதிகா சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் பேசியபோது, 'தஞ்சை மருத்துவமனைக்கு படப்பிடிப்பின் போது தான் சென்றதாகவும் அப்போது அந்த மருத்துவமனை பராமரிப்பு சரியில்லாமல்

சமூகவலைத் தளத்தில் உலாவும் சதிக்கோட்பாடு!!! திணறும் டிவிட்டர், பேஸ்புக் நிறுவனங்கள்!!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக பயங்கரச் சதித்திட்டங்கள் தீட்டப்படுகிறது என்ற கருத்தை வலுவாக நம்பி, அப்படியான கருத்தை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விவாதித்து