close
Choose your channels

லான்சன் டொயோட்டா பொதுமேலாளரின் மனைவி சென்னையில் தற்கொலை!

Thursday, September 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கின்றது. ஓலா, உபேர் வருகையும் மெட்ரோ ரயிலுமே ஆட்டோமொபைல் துறை நசிவிற்கு காரணமாக நிதியமைச்சரே சமீபத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஜப்பானின் புகழ்பெற்ற லான்சன் டொயோட்டாவின் தமிழக டீலரின் பொதுமேலாளரின் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில் நஷ்டம் காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

லான்சன் டொயோட்டா நிறுவனத்தின் தமிழக பொது மேலாளர் லிங்காலிங்கம் என்பவர் மனைவி ரீட்டா லிங்காலிங்கம் இந்த நிறுவனத்தின் இணை சேர்மனாக இருந்து வருகிறார். இந்த நிலையில் லான்சன் டொயோட்டா நிறுவனத்தின் மேலாளர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரீட்டா லிங்காலிங்கம் மற்றும் லிங்கா லிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்தக் கூட்டத்தில் மேலாளர்களை கடுமையாக ரீட்டா லிங்காலிங்கம் திட்டியதாகவும் இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது

இந்த கூட்டம் முடிந்தவுடன் இருவரும் ஒரே காரில் வீட்டுக்கு செல்லும்போதும் காரிலேயே இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து வீட்டுக்குச் சென்றவுடன் வேகமாக வீட்டிற்கு சென்ற ரீட்டா லிங்காலிங்கம், கணவரை வெளியே நிறுத்திவிட்டு கதவை பூட்டிக்கொண்டு கொண்டார். இதனை அடுத்து கணவரை ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார்

இந்தநிலையில் வீட்டிற்குள் சென்ற பின் ரீட்டா லிங்காலிங்கம் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். தனியார் ஓட்டலில் தங்கியிருந்த அவரது கணவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.