close
Choose your channels

கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது: அமிதாப் குடும்பம் குறித்து லதா மங்கேஷ்கர்

Monday, July 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே. முதல்கட்ட பரிசோதனையில் ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராதித்யா ஆகியோருக்கும் கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்த நிலையில் அடுத்தகட்ட பரிசோதனையில் இருவருக்குமே பாசிட்டிவ் என ரிசல்ட் வந்ததால் இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் சமீபத்தில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அமிதாப் குடும்பத்தினர் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு வர வேண்டும் என அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருவதோடு அவர்களுக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அமிதாப் குடும்பத்தினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய போது ’இந்த செய்தியை கேட்டதும் எனக்கு கன்னத்தில் அறைவது போல் இருந்தது. அமிதாப் குடும்பத்தினர்களை கொரனோ வைரஸ் நோய் தாக்கியது என்பதை நம்புவதற்கு கடினமாக உள்ளது. கொரோனா வைரஸ் யாரையும் விடவில்லை. அது இங்கேயேதான் மாற்றி மாற்றி அனைவரையும் தாக்கிக் கொண்டே வருகிறது’ என்று கூறினார்

மேலும் ஆராதித்யா சின்ன குழந்தை, அவர் கஷ்டப்படக்கூடாது. முழு அமிதாப்பச்சன் குடும்பத்திற்காகவும் குறிப்பாக ஆராதித்யாவுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். அவர்கள் அனைவரும் விரைவில் மீண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார். லதா மங்கேஷ்கரின் இந்த பேட்டி தற்போது பரபரப்பாக வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.