வதந்திகளை நம்ப வேண்டாம்: லதா ரஜினி பள்ளி நிர்வாகம் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,August 16 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை, ரேஸ் கோர்ஸ் சாலையில் ராகவேந்திரா கல்வி குழுமம் என்ற பெயரில் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். இந்த பள்ளிக்கு தாளாளராக லதா ரஜினிகாந்தும், நிர்வாக அறங்காவலராக ரஜினிகாந்தும் பொறுப்பு வகித்து வருகின்றனர். ராகவேந்திரா கல்வி குழுமம் வெங்கடேஸ்வரலு என்பவரின் நிலத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது.
இந்த பள்ளிக்கு கடந்த ஐந்து வருடங்களாக வாடகை தரவில்லை என்றும் வாடகை தொகை ரூ.10 கோடி வரை உள்ளதால் கட்டிடத்தை காலி செய்யும்படி நிலத்தின் உரிமையாளர் கூறி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை திடீரென பள்ளி கட்டிடத்தை காலி செய்ய சொல்லி அங்கு படிக்கும் மாணவர்களை வெளியேற்றியதாகவும், மாணவர்கள் வெளியேறியவுடன் பள்ளிக்கு கட்டிட உரிமையாளர் பூட்டு போட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கட்டட உரிமையாளர் வெங்கடேஸ்வரலு, 'கிண்டியில் லதா ரஜினிகாந்த் நடத்திவரும் பள்ளிக்கு 2009 முதல் தற்போது வரை 10 கோடி வாடகை பாக்கி தர வேண்டி உள்ளது. 10 கோடி ரூபாய் கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது 2 கோடி ரூபாய் தருவதாக லதா தரப்பு கூறியது. ஆனால் இன்னும் தரவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளி நிர்வாகம், வாடகை தராததால் பள்ளி இழுத்து மூடப்பட்டதாக வெளியான தகவல் பொய்யானது. வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்' என்று தெரிவித்துள்ளது.

More News

'மெர்சல்' படத்தின் 'மெலடி' பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'ஆளப்போறான் தமிழன்' பாடல் சமீபத்தில் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் ஒரு சுனாமியை கிளப்பி தற்போதுதான் ஓய்ந்துள்ளது.

கமல்ஹாசனை ஒருமையில் விமர்சித்த மேலும் ஒரு அமைச்சர்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசு மீது வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி வரும் அமைச்சர்கள் கமல்ஹாசனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மோசமான கருத்துக்களை வெளிப்படுத்துவதோடு அவரை ஒருமையிலும் விமர்சித்து வருகின்றனர்.

மூன்றாம் பிறை' ஸ்ரீதேவிக்கு இணையான கேரக்டர்: பலூன் பட நடிகை பெருமிதம்

இயக்குனர் சினிஷ் இயக்கத்தில் ஜெய்-அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள 'பலூன் திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது. 'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு பின் மீண்டும் இணைந்து நடித்துள்ள ஜெய்-அஞ்சலி ஜோடி நிஜத்திலும் ஜோடியாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது...

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துவிட்டார் பிரபல நடிகை!

ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேற்பு குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக நேற்றைய நிகழ்ச்சியில் பல பார்வையாளர்கர் பாதியில்  வெளியேறியிருப்பார்கள். அந்த அளவுக்கு சலிப்பு தரும் காட்சிகள் இருந்தது...

மாநில அரசை விமர்சிக்காதது ஏன்? 'தரமணி' இயக்குனர் ராம் விளக்கம்

பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த 'தரமணி' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது...