close
Choose your channels

திருமணத்திற்குப் பின்னும் பலவந்தமாக படுக்கைக்கு அழைத்தார்கள்! முன்னணி நடிகை வெளியிட்ட பகீர் தகவல்!

Tuesday, April 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அனைத்து மொழி திரைத்துறையில், பட வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகள், பரவலாக கூறிவரும் குற்றச்சாட்டுகளில் ஒன்று படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கூறுவதாக சொல்வதுதான்.

சமீபத்தில் 'மீடூ' என்கிற ஹாஷ்டாக் மூலம் பல நடிகைகள் தங்களுடைய மனதில் உள்ள ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர். இதில் இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் வெளியாகி திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா தன்னுடைய திரை வாழ்வில் நடந்தவற்றை முதல் முறையாக கூறியுள்ளார். 2002 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்தவர் நடிகை ரிச்சா.

ஒல்லியாக இருக்கும் நடிகைகள் மத்தியில், சற்று புசுபுசுவென்று இருப்பதே இவரின் பிளஸ் என கூறலாம். முன்னணி நடிகையாக இருக்கும் போதே திடீரென திரை உலகை விட்டு சற்று விலகியே இருந்தார். பின் திருமணம் செய்துகொண்டு முழுமையாக திரையுலகிற்கு முழுக்கு போட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்... திரைத்துறையில் நடிக்க வாய்ப்பு கேட்கும் போதெல்லாம் படுக்கைக்கு அழைக்கின்றனர். ஆனால் அவர்களுடைய பெயர் சொல்ல விருப்பம் இல்லை. இதனால் திரைத்துறையை வேண்டாம் என விலகினேன். திருமணத்திற்குப் பின்பு நடிக்க வாய்ப்பு கேட்ட போதும், பலவந்தமாக படுக்கைக்கு அழைத்தனர் இதனால் சினிமா துறையை வேண்டாம் என முடிவு கட்டி விட்டதாக தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.