கன்னடம் தெரியாவிட்டால் வேலை காலி: புதிய அறிவிப்பால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Tuesday,August 08 2017]

கர்நாடக மாநிலத்தில் உள்ள வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் ஆறு மாதங்களுக்குள் கன்னட மொழியை பழகாவிட்டால் வேலையில் இருந்து நீக்கப்படுவர் என்ற அறிவிப்பு வங்கி ஊழியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நடைமுறை கர்நாடகாவில் உள்ள தேசிய, தனியார் மற்றும் கிராம வங்கிகளிலும் கடைபிடிக்கப்படவுள்ளதாகவும், ஊழியர்கள் கன்னட மொழியை தெரிந்து கொள்வது கட்டாயமாக்கப்படுவதாகவும் கன்னட மேம்பாட்டு ஆணையத்தின் சேர்மன் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் கன்னட மொழியை மட்டுமே தெரிந்திருப்பதாகவும், அவர்களுக்கு திருப்தியான முறையில் சேவை செய்ய வேண்டுமானால் வங்கி ஊழியர்களுக்கு நிச்சயம் கன்னடம் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாக இருப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டே இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சித்தராமையா மேலும் கூறியுள்ளார்.
வங்கி ஊழியர்கள் கன்னடம் கற்க வங்கியே சிறப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்யும் என்றும் ஆறு மாதத்தில் கன்னடம் கற்காதவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படும் நிலை வரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது வங்கி விண்ணப்பங்கள் மற்றும் செலான்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருப்பதாகவும், இவற்றில் கன்னடமும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இது கிராமப்புற வங்கிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று சித்தராமையா மேலும் கூறியுள்ளார்.
ஒரு மாநிலத்தின் மக்களுக்கு சிறப்பாக சேவை செய்ய அந்த மாநிலத்தின் மொழியை வங்கி ஊழியர்கள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்றும், இதே நடைமுறை வங்கியில் மட்டுமின்றி அனைத்து துறைகளுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

More News

சினிமாவில் நடிக்க போகிறாரா ஜூலி? சகோதரர் விளக்கம்

கமல்ஹாசன் இருக்கும் பிக்பாஸ் அரங்கிற்குள் ஓவியா நுழைந்ததும் ஆடியன்ஸ்களின் கைதட்டல் விண்ணை பிளந்தது. கையொலி ஓசை அடங்க ஒருசில நிமிடங்கள் ஆனதை கண்டு கமல்ஹாசனே கொஞ்சம் திகைத்து போனார்.

மீண்டும் உள்ளே ஓவியா! களைகட்டுமா பிக்பாஸ்?

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் சேனல், ஓவியா இல்லாமல் இனிமேல் ஒருநாள் கூட நிகழ்ச்சியை நடத்த முடியாது என்பதை புரிந்து கொண்டார்களோ என்னமோ, ஓவியாவை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது...

முதன்முதலாக இணையும் அஜித்-மகேஷ்பாபு? ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள 'ஸ்பைடர்' படத்தின் டீசர் மகேஷ்பாபுவின் பிறந்த நாளான நாளை வெளியாகவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்....

கணேஷை கார்னர் செய்யும் பிக்பாஸ் பங்கேற்பாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஆரம்பத்தில் இருந்தே ஒரு ஃபார்முலாவை கடை பிடித்து வருகின்றனர்...

அடுக்குமாடி குடியிருப்பில் மாதக்கணக்கில் பிணமாக இருந்த பெண்: அதிர்ச்சியில் மகன்

பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்பவர்கள் பக்கத்து வீட்டில் யார் இருக்கின்றார்கள், அவர்கள் பெயர் என்னவென்று கூட தெரியாமல் வருடக்கணக்கில் வாழும் கலாச்சாரம் பெருகி வருகிறது. பக்கத்து வீட்டில் தனியாக இருக்கும் ஒருவர் மரணம் அடைந்தால் கூட, பல நாட்கள் கழித்து துர்நாற்றம் வைத்தே கண்டுபிடிக்கும் நிலை உள்ளது.