close
Choose your channels

லெஜண்ட் சரவணனின் ஜோடி இப்போ சேரு பூசின பாடி: வைரல் புகைப்படம்!

Tuesday, June 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டையர்கள் இயக்கி வருகின்றனர் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

லாக்டவுன் முடிந்தவுடன் மீதி படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்துவிட்டு ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரூபாய் 200 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் லெஜண்ட் சரவணன் ஜோடியாக கீத்திகா திவாரி மற்றும் ஊர்வசி ரெளட்டாலா நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான ஊர்வசி ரெளடாலா சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவர் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேறு பூசிக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சேறுக்குளியல் என்பது தனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்றும், கிளியோபாட்ரோ இதே சேறுக்குளியலை மிகவும் விரும்புவார் என்றும், சருமத்திற்கு இந்த குளியல் மிகவும் நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு சுமார் 12 லட்சம் லைக்ஸ்கள் குவிந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.