என் வீடு என்றென்றும்  திறந்து இருக்கும், 24 மணி நேரமும் அன்னதானம்: லெஜண்ட் சரவணன்

மக்களுக்காக என் வீடு என்றென்றும் திறந்திருக்கும் என்றும் 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெறுவதாகவும் லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார்.

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் சமீபத்தில் 'தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்தார் என்பதும் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று விஜயதசமியை முன்னிட்டு லெஜண்ட் சரவணன் அவர்களின் சொந்த ஊரில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மேலும் அவரது வீட்டில் 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெற்று வருவதாகவும் அதில் அந்த பகுதியில் உள்ள ஏராளமான ஒரு சாப்பிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து லெஜண்ட் சரவணன் தனது டுவிட்டரில், ‘என் மீது அன்பை வைத்திருக்கும் என் மக்களுக்காக என் வீடு என்றென்றும் திறந்து இருக்கும் என்றும் 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெறுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

More News

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி: நீண்ட காத்திருப்புக்கு முடிவு!

விஜய் சேதுபதி நடித்த படங்களில் ஒன்று நீண்டகாலமாக திரையிடப்படாமல் கால தாமதமாகி வந்த நிலையில் தற்போது அந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

பருந்தாகுது ஊர்க்குருவி': ஒரே நாளில் நடந்த உண்மைக்கதை!

லைட்ஸ் ஆன் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில்  தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ருஸ்ஸோ மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'பருந்தாகுது ஊர்க்குருவி'

'பொன்னியின் செல்வன்' பார்த்து ரஜினி, ஷங்கர் என்ன சொன்னார்கள் தெரியுமா? வைரல் டுவிட்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது

சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் விஜய் ஹீரோ இல்ல, அப்ப யாரு ஹீரோ? எஸ்.ஏ.சி பகிர்ந்த தகவல்!

தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் விரைவில் இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாவார் என்று கூறப்படும் நிலையில் அவர் இயக்கும் முதல் படத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடிப்பார்

'மர்மதேசம்' தொடரின் குழந்தை நட்சத்திரம் திடீர் தற்கொலை: அதிர்ச்சியில் சின்னத்திரையுலகம்!

சன் டிவியில் கடந்த 1996ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'மர்மதேசம்' என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் திடீரென தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.