close
Choose your channels

என் வீடு என்றென்றும்  திறந்து இருக்கும், 24 மணி நேரமும் அன்னதானம்: லெஜண்ட் சரவணன்

Wednesday, October 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்களுக்காக என் வீடு என்றென்றும் திறந்திருக்கும் என்றும் 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெறுவதாகவும் லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார்.

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் சமீபத்தில் 'தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்தார் என்பதும் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று விஜயதசமியை முன்னிட்டு லெஜண்ட் சரவணன் அவர்களின் சொந்த ஊரில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மேலும் அவரது வீட்டில் 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெற்று வருவதாகவும் அதில் அந்த பகுதியில் உள்ள ஏராளமான ஒரு சாப்பிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து லெஜண்ட் சரவணன் தனது டுவிட்டரில், ‘என் மீது அன்பை வைத்திருக்கும் என் மக்களுக்காக என் வீடு என்றென்றும் திறந்து இருக்கும் என்றும் 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெறுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.