close
Choose your channels

வீட்டில் நிகழ்ந்த துக்க சம்பவம்.. 'லியோ' படப்பிடிப்பில் இருந்து சென்னை திரும்பிய பிரபலம்..!

Sunday, February 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’லியோ’ திரைப்படத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த டெக்னீசியின் ஒருவரது வீட்டில் நிகழ்ந்த துக்கம் காரணமாக உடனடியாக சென்னை திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்து சில நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது என்பதும் கடும் குளிரிலும் இந்த படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’லியோ’ படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து கொண்டிருக்கும் மனோஜ் பரமஹம்சாவின் தாயார் நேற்று திடீரென காலமானார். இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மனோஜ் பரமஹம்சா படப்பிடிப்பிலிருந்து சென்னை திரும்பி உள்ளதாகவும் தற்போது அவர் இறுதிச்சடங்கு பணிகளை கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களுக்கு பின் மீண்டும் அவர் காஷ்மீர் திரும்பி 'லியோ’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.