இந்த நாள் கொண்டாடப்பட வேண்டிய நாள். புரிந்து கொள்ளுங்கள் மாணவர்களே. ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Monday,January 23 2017]

கடந்த ஒரு வாரமாக அறவழியில், அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தற்போது வன்முறை பக்கம் திரும்பிவிட்டது. மாணவர்கள் என்ற போர்வையில் அரசியல்வாதிகளின் கைக்கூலிகள் நுழைந்ததே இந்த வன்முறைக்கு காரணம் என போலீசார் உள்பட பொதுமக்கள் பலர் கூறி வருகின்றனர். உண்மையில் ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிட்டது, ஆனால் இதை மாணவர்களுக்கு புரிய வைப்பதற்குள் இந்த வன்முறை நிகழ்ந்துவிட்டதாகவே அனைவரும் கருதுகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் தனது உடல்நிலையையும் கருதாமல் இந்த போராட்டத்தை நிறுத்த பெரும் முயற்சி செய்து வருகிறார். இவர் சற்று முன் வெளியிட்டுள்ள வீடியோ செய்தி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது:

'தற்போது தமிழக பொறுப்பு ஆளுனர் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிட்டது என்று மீடியாவிடம் கூறிக்கொண்டு இருக்கின்றார். எனவே நமது போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டது. உண்மையாகவே வெற்றி கிடைத்துவிட்டது. ஏன் இதை யாரும் புரியாமல் உள்ளீர்கள். நான் தற்போது மெரீனாவுக்கு வந்து கொண்டிருக்கின்றேன். இந்த நாள் நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய நாள்.

நாம் இதுவரை கஷ்டப்பட்டு போராடிய இடத்தில் ஆடிப்பாடி கொண்டாட வேண்டிய நாள் இன்று. அதனால் கடல் அருகே செல்வது, சாலையில் உட்காருவது ஆகியவற்றில் மாணவர்கள் ஈடுபட வேண்டாம்,. இன்று இரவு நாம் அனைவரும் இந்த வெற்றியை கொண்டாடுவோம். எனவே தயவுசெய்து மாணவர்கள் பொறுமை காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

More News

திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் தீவைப்பு. காரணம் யார்?

சென்னையில் மாணவர்களின் போராட்டத்தை வலுக்கட்டாயமாக போலீஸார் நிறுத்தி வரும் நிலையில் ஒருசில இடங்களில் வன்முறை வெடித்துள்ளது...

பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ஜி.வி.பிரகாஷ்-ராகவா லாரன்ஸ்

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை மெரீனாவில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் ஒருசில இடங்களில் போலீசார் லேசான தடியடி நடத்தியுள்ளனர். இதனால் மெரீனா உள்பட சென்னையின் ஒருசில பகுதிகளில் பதட்டம் நிறைந்து காணப்படுகிறது...

என் இதயம் மெரீனாவில்தான் உள்ளது. மருத்துவமனையில் இருந்து ராகவா லாரன்ஸ் தகவல்

சென்னை மெரீனாவில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு கொடுத்து வந்த நடிகர் ராகவா லாரன்ஸ், போராட்டக்காரர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்பட பல வசதிகளை தனது சொந்த செலவில் செய்து கொடுத்தார்...

மெரீனாவுக்கு செல்லும் பாதைகள் முடக்கம். திருவல்லிக்கேணியில் போலிசார் தடியடி.

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும், பீட்டாவைத் தடை செய்யக்கோரியும் கடந்த ஏழு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை சென்னை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வெளியேற்றி வருகின்றனர்.

இளையதளபதியின் 'பைரவா' சென்னை வசூல் குறித்த தகவல்

ஒவ்வொரு வாரமும் சென்னை பாக்ஸ் ஆபிஸ் விபரங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த வார இறுதி நாட்களில் சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக நடந்ததால் திரையரங்குகளில் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.