close
Choose your channels

வீரமரணம் அடைந்த வீரரின் உடல் வருவதற்குள் காப்பீட்டு தொகையை அளித்த எல்.ஐ.சி

Saturday, February 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வீரமரணம் அடைந்த வீரரின் உடல் வருவதற்குள் காப்பீட்டு தொகையை அளித்த எல்.ஐ.சி

நேற்று முன் தினம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புலாவா பகுதியில் தற்கொலைப்படை தீவிரவாதிகளின் பயங்கர தாக்குதலுக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்தனர். தற்போது வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டு அரசு மரியாதையுடன் தகனம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது

இந்த நிலையில் இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த 44 வீரர்களில் ஒருவர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த குரு. இவரது மரணச்செய்தி அறிந்த ஒருசில மணி நேரத்தில் எல்.ஐ.சி. நிறுவனம் அவரது பாலிசிக்கான தொகையான ரூ.3,82,199 தொகையை அவரது நாமினியின் வங்கிக்கணக்கில் செலுத்திவிட்டது.

இந்த பணத்தை யாரும் கிளைம் செய்யாமலேயே, இறப்பு சான்றிதழ் உள்பட எந்தவித ஆவணங்களையும் கேட்காமலேயே பணத்தை வங்கிக்கணக்கில் எல்.ஐ.சி டெபாசிட் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குரு விஷயத்தில் எல்.ஐ.சி காட்டிய வேகத்தை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.