எனக்குரிய Hus இன்னும் கிடைக்கல… 10 கல்யாணம் முடிஞ்சு 11 ஆவது முறையாக மணப்பெண் போட்ட கண்டிஷன்!!!

  • IndiaGlitz, [Saturday,October 31 2020]

 

அமெரிக்காவில் ஒரு பெண் 10 திருமணங்களைச் செய்த பிறகும் சரியான துணை கிடைக்காமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். இந்நிலையில் தனக்குரிய தகுதியான துணைக் கிடைக்கும் வரை தன்னுடைய தேடலை நிறுத்தப் போவதில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும் அப்படி துணையைத் தேடுவதில் எந்தத் தவறும் இல்லை என்ற தன்னுடைய கருத்திலும் அவர் மிக உறுதியாக இருக்கிறார். இச்சம்பவம் இணையத்தில் கடும் வைரலாகி இருக்கிறது.

பெண்கள் தங்களது துணையைத் தேடுவதில் இன்னும் முடிவெடுக்கவே முடியாமல், பல நாடுகளில் பெண்கள் அல்லல்பட்டு வரும் நிலையில் அமெரிக்காவில் கேசி எனும் 56 வயதான பெண்மணி தற்போது 11 ஆவது திருமணத்திற்கு தயாராகி இருக்கிறார். தன்னுடைய 10 திருமணங்கள் தோல்வி அடைந்தது குறித்து அவர் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இருக்கிறார். காரணம் கேசிக்கு அவரை மட்டுமே நேசிக்கும் ஒரு கணவர் தனக்கு துணையாக வேண்டும் என்பது ஆசை.

அவருடைய ஆசை இன்னும் நிறைவேறாத நிலையில் தற்போது 11 ஆவது திருமணத்திற்கு தயாராகி இருக்கிறார் கேசி. மேலும் தன்னை மட்டுமே நேசிக்கும் குணம் கொண்ட ஒருவர் வேண்டும் என்னும் தன்னுடைய கண்டிஷனையும் அவர் தெளிவாக கூறியிருக்கிறார். இதுவரை செய்துகொண்ட 10 திருமணங்களில் முதலில் வாழ்ந்தவருடன் 8 வருடங்கள், இரண்டாவது திருமணத்தில் 6 வருடங்கள், மூன்றாவது 2 அரை வருடம் என வாழ்ந்து இருக்கிறார்.

மூன்றாவது கணவர் மூலமாக இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருடை மிக குறைந்த திருமண வாழ்க்கை என்பது 6 மாதமாக இருந்திருக்கிறது. தன்னுடைய 10 வது கணவரை சில தினங்களுக்கு முன்புதான் இவர் பிரிந்து இருக்கிறார். திருமண உறவை எப்படி பராமரிப்பது எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேசி எனக்கு ஒத்து வராத நிலையில் நான் நேரடியாக கணவனிடம் பேசிவிடுவேன். பின்பு விவகாரத்து வாங்கிக் கொண்டு அந்த வாழ்க்கையில் இருந்து வெளியேறி விடுவேன். இதில் தேவையில்லாத மணஸ்தாபங்கள், சண்டை சச்சரவுகள் எதற்கும் இடமேயில்லை எனக் கூறியிருக்கிறார். இவருடைய கருத்து சமூக வலைத் தளங்களில் தற்போது கடும் வைரலாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

More News

பாரதிராஜா மகன் இயக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு! 

இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தியவர் என்பதும் அவரிடம் உதவியாளராக இருந்தவர்கள் தான் திரை உலகில் மிகப்பெரிய இடத்தில் இருக்கின்றனர் என்பதும் தெரிந்ததே

அனிதாவுக்கு ஆதரவு கொடுத்த கமல்: அர்ச்சனாவுக்கு அதிர்ச்சியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது புரோமோவில் அனிதாவுக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தது அர்ச்சனா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு அதிர்ச்சியாக இருந்ததாக தெரிகிறது 

ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்: தமிழக அமைச்சர் பேட்டி 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிப்பார் என்றும், உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வருவதில் இருந்து பின்வாங்குவார்

திரையரங்குகள் திறப்பது எப்போது? நாளை அறிவிப்பு என அமைச்சர் பேட்டி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும், கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும்

பிக்பாஸ் வீட்டில் இன்று எண்ட்ரியாகும் பிரபலம்: பரபரப்பு தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 27 நாட்கள் ஆகிவிட்டது என்பதும் இந்த 27 நாட்களில் ரேகா ஒருவர் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளார் என்பதும் அதற்கு பதிலாக அர்ச்சனா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக