ரஜினி பட தயாரிப்பாளருக்கு கொரோனா? மருத்துவமனையில் அனுமதி

  • IndiaGlitz, [Friday,July 10 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லிங்கா’ உள்பட பல வெற்றி திரைப்படங்களை தயாரித்தவர் ராக்லைன் வெங்கடேஷ். இவர் சிம்பு நடித்த ‘தம்’, விக்ரம் நடித்த ‘மஜா’ ஆகிய தமிழ் படங்களையும் பல தெலுங்கு மற்றும் தென்னிந்திய படங்களையும் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் ராக்லைன் வெங்கடேஷ் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகையும் அரசியல்வாதியுமான சுமலதாவை இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சந்தித்ததால் இவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் ராக்லைன் வெங்கடேஷின் கொரோனா பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை என்பதும், பரிசோதனையின் முடிவுக்கு பின்னரே அவருக்கு அடுத்தகட்ட சிகிச்சை அளிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கடைசியாக கடந்த ஆண்டு ராதிகா பண்டிட் நடித்த ‘ஆதிலட்சுமி பூரணா’ என்ற தெலுங்கு படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

பிரபல ரவுடி விகாஷ் துபே என்கவுண்டரில் சுட்டு கொலையா? பெரும் பரபரப்பு

உத்தரப்பிரதேசத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை என தகவல் வெளிவந்துள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பிரபல வில்லன் நடிகரின் சிகிச்சைக்கு உதவிய கமல்!

பிரபல வில்லன் நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான பொன்னம்பலம் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மீண்டும் 4000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: வழக்கம்போல் மீண்டு வரும் சென்னை!

தமிழ்நாட்டில் இன்று 4231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும்

பிரபல பாடகர் கொல்லப் பட்டதற்காக வெடித்த போராட்டம்!!! வன்முறையாக மாறியதால் நடந்த கொடூரம்!!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தோப்பியாவில் ஒரு பிரபல பாடகர் மர்ம நபர்களால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

அவருடைய பந்திற்கு சச்சினே பயப்படுவார்… சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட அஃப்ரிடி!!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விலகியதில் இருந்தே சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.