7 ஆவது முறையாக விருது… அசத்தும் கால்பந்து கிங் லியோனல் மெஸ்ஸி!

கால்பந்து உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வரும் லியோனல் மெஸ்ஸிக்கு “பாலன் டி ஓர்“ விருது வழங்கப்பட்டு உள்ளது. மிகச்சிறந்த கால்பந்து வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த விருதை மெஸ்ஸி 7 ஆவது முறையாகத் தட்டிச் சென்றுள்ளார்.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மற்றும் உலகின் முன்னணி கால்பந்து வீரராக இருந்துவரும் லியோனல் மெஸ்ஸி சமீபத்தில் பார்சிலோனா கிளப் அணியில் இருந்து வெளியேறினார். தற்போது அர்ஜென்டினா அணிக்காக மட்டுமே விளையாடிவரும் இவரது தலைமையில் சமீபத்தில் 15 ஆவது அமெரிக்க கோபா சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டினா அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.

இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான மிகச்சிறந்த கால்பந்து வீரராக லியோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய இந்த விருது வழங்கும் விழா நேற்று பாரீஸில் நடைபெற்றது. இதில் மெஸ்ஸி 7 ஆவது முறையாக “பாலன் டி ஓர்“ விருதை பெற்றுக்கொண்டார்.

இதற்கு முன்பு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் முறையாக பாலன் டி ஓர் விருதை வென்ற மெஸ்ஸி, அதற்குப்பின் கடந்த 2010, 2011, 2012 எனத் தொடர்ந்த மூன்று முறை விருதைத் தட்டிச்சென்றதும் குறிப்பிடத்தக்கது. அடுத்து 2015 இல் 5 ஆவது முறையாக விருது வென்ற மெஸ்ஸி 2020 இல் 7 ஆவது முறையாக இந்த விருதைத் தட்டிச்சென்றுள்ளார்.

அதேபோல மிகச்சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருதை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த புட்டெல்லாஸ் தட்டிச்சென்றுள்ளார். இவர் இந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியதால் 3 ஆவது முறையாக பால் டீ ஓர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கமல்ஹாசன் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்கள் நீதி மய்யம்!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி விட்டதாக வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கையால் திரையுலகினர் அதிர்ச்சி!

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளது திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

செம்மையா பண்ற நீ: மீண்டும் மோதும் தாமரை-பிரியங்கா!

கடந்த சில நாட்களாகவே தாமரை மற்றும் பிரியங்கா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது என்பதும் இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

மாறி மாறி பேசும் பிக்பாஸ் ராஜூ: நெட்டிசன்கள் போட்ட குறும்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கேப்டன் நிரூப் கூறிய ஒரு ஐடியாவுக்கு இமான் அண்ணாச்சி, வருண் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதும் இதனால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே.

சிஎஸ்கே தக்க வைத்து கொண்ட நான்கு வீரர்கள் இவர்களா?

2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இணைந்து உள்ளதை அடுத்து ஒட்டுமொத்த 10 அணிகளுக்குமான வீரர்களின் ஏலம் டிசம்பர் இறுதியில்