ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பா? அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது என்பதும் அந்த ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீடிக்கும் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி முடிவடையும் ஊரடங்கு உத்தரவு, ஏப்ரல் 30ஆம் தேதி வரை உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில் நீடிக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் நொய்டா தவிர உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது ஆறுதலுக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களால் இந்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவையே தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்தால் மக்களின் நிலையில் திண்டாட்டமாகிவிடும் என்பது குறிப்பிடதக்கது.
 

More News

மோடி ஏன் விளக்கேற்ற சொன்னார்? காயத்ரி ரகுராம் விளக்கம் 

இந்திய பிரதமர் மோடி அவர்கள் இன்று இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு தீபம் ஏற்றும்படி கேட்டுக் கொண்டார். இதனையடுத்து பல்வேறு திரையுலக பிரபலங்கள்

எல்லோரும் 9 மணிக்கு விளக்கேற்றுங்கள்: பிரபல தமிழ் நடிகர்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏப்ரல் ஐந்தாம் தேதி அதாவது இன்று இரவு 9 மணிக்கு அனைவரும் வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகள்,

கொரோனா விடுமுறையில் வீட்டில் அல்வா கிண்டிய பிரபல நடிகை

கொரோனா வைரசால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பிசியாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் நடிகைகள் அனைவரும் தற்போது நாட்கணக்கில் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர் 

கணவருக்கு கொரோனா கசாயம் கொடுத்து சொந்த வீட்டிலேயே திருடிய மனைவி கைது!

கணவருக்கு தூக்க மருந்து கலந்த கொரோனா கசாயம் கொடுத்து சொந்த வீட்டிலேயே 100 பவுன் நகை திருடிய மனைவியால் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன் தினம் ஒன்று மட்டுமே இருந்த நிலையில் நேற்று இருவர் பலியானதால் அந்த எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது