close
Choose your channels

சென்னைக்கு மட்டும் ஊரடங்கு நீட்டிப்பா? அதிர்ச்சி தகவல் 

Thursday, May 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரல் காரணமாக இந்தியாவில் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதை அடுத்து 30ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு குறித்த தகவல் மத்திய அரசிடம் இருந்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் அரசு வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின் படி சென்னை உள்பட 11 முக்கிய நகரங்களில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம் என்றும் நாட்டின் மொத்த பாதிப்பில் இந்த 11 நகரங்களில் பாதிப்பு மட்டுமே 70% என்றும் எனவே இந்த 11 நகரங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவை மீண்டும் நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாகவும் மற்ற பகுதிகளில் ஊரடங்கு தளர்வு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத், புனே, தானே, ஜெய்ப்பூர், சூரத் மற்றும் இந்தூர் ஆகிய 11 நகரங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகம் என்பதால் இந்நகரங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு 30ஆம் தேதி வெளிவரும் என்று கூறப்படுகிறது

தமிழகத்தில் சென்னை மட்டுமே இந்த பட்டியலில் இருப்பதால் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 1-ஆம் தேதி முதல் இருக்க வாய்ப்பு குறைவு என்றே கருதப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.