close
Choose your channels

'விக்ரம்' படத்தில் லோகேஷ் வைக்கும் சஸ்பென்ஸ்: ரசிகர்கள் ஆச்சரியம்!

Monday, September 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் அதனை அடுத்து காரைக்குடியிலும் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு புதுவையில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தின் இறுதியில் லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய சஸ்பென்சை வைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது இந்த படத்தின் இறுதியில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்ற ஒரு அறிவிப்பை அவர் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கார்த்தி நடித்த ’கைதி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்பதையும் அந்த படத்தின் இறுதியில் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ’விக்ரம்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் லோகேஷ் கனகராஜ் உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கமல்ஹாசன் ’இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் என்பதும், விரைவில் ‘பாபநாசம்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ள நிலையில் ’விக்ரம்’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.